Tuesday, January 3, 2012

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்தஅறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரஅருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும். அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும். 
 
நன்றி: webdunia

Thursday, April 7, 2011

**  அக்குபங்க்ச்சர் சிகிச்சை என்றால் என்ன?


அக்குபங்க்ச்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோளின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக்கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

நம் உடலின் உள்ளுறுப்புகளின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள தேக்கம் அல்லது குறைபாடே நோயாகும். அக்குபங்க்ச்சர் நாடிப் பரிசோதனை மூலம் ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து, அதனை சரி செய்யக்கூடிய அக்குபங்க்ச்சர் புள்ளியினை தொடுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.

** அக்குபங்க்ச்சர் முறையில் உடலில் நிறைய ஊசிகளைச் செருகி, அவற்றில் மின்சாரம் செலுத்தப்படும் என்று கூறுகிறார்களே?

அக்குபங்க்ச்சர் சிகிச்சை என்பது ஒன்றிரண்டு புள்ளிகளில் ஊசியாலோ அல்லது கையாலோ தொட்டு சிகிச்சையளிப்பது மட்டும் தான். இன்னும் சொல்வதானால், வெறும் கையால் தொட்டு சிகிச்சையளிப்பது தான் உண்மையான அக்குபங்க்ச்சர். ஏனென்றால், அக்குபன்க்ச்சரின் துவக்க காலத்தில் ஊசி போன்ற உலோகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை.

அக்குபங்க்ச்சர் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவியபோது, அந்தந்த பகுதிகளின் தன்மைக்கேற்ப மாறுதல்கள் உருவாயின. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இம்முறை பரவிய பின்பு வணிகமயமாக்கப்பட்டது. நோயாளியிடம் பணம் பறிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் பின்பற்றப்பட்டது. அதன் விளைவுகள் தான் - மின்தூண்டல் சாதனங்கள் (Electric Stimulators ), சக்தி அளவு பரிசோதனைக்கருவி, (Computer Meridian Diagnosis ), துணை உணவுகள் (Supplementary Foods) எனும் மருந்துகள், இரத்த ஓட்டத்தை சீரமைக்கும் கருவி (Blood Circulative Massagers) போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.

இவற்றுக்கும் அக்குபன்க்ச்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,

**  தினம் தினம் சிகிச்சை செய்வீர்களா?

தேவையில்லை. 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது நோயிளிரிந்து விரைவாக குணமடைய வழி வகுக்கும்.


**  கண்டிப்பாக 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அவசியம் தவறாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஏதேனும் சந்தர்ப்பத்தால் ஒருமுறை அல்லது இருமுறை சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறிவிட்டால் நோயிலிருந்து பலன் பெற முடியாமல் போய்விடுமா?

ஒவ்வொருமுறை செய்யப்படும் சிகிச்சையும் நீங்கள் நோயிலிந்து விடுபட வழிவகுக்கிறது. ஓரிருமுறை சந்தர்ப்ப சூழ்நிலையில் சிகிச்சை தவறிவிடுவதால் ஏற்கனவே பார்த்த சிகிச்சையின் பலன் குறைந்துவிடாது. விடுபட்ட சிகிச்சையிலிருந்து தொடர்ந்து சிகிச்சை செய்து கொள்ளலாம்.



**  சுமார் எத்தனை நாளில் குணம் தெரியும்?

சிலருக்கு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு நான்கு, ஐந்து வாரங்கள் கழித்து திடீரென மாறுதல்கள் தெரிய ஆரம்பிக்கும்.


**  ஒருமுறை சிகிச்சை செய்தால் அது எத்தனை நாட்களுக்கு வேலை செய்யும்?

உடலில் உள்ள நோய்களுக்கு ஏற்றவாறு ஒருமுறை சிகிச்சை செய்வதன் மூலம் பூரணகுணம் அடைபவர்களும் உண்டு. ஒரு சிலருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அத்துடன் நின்றுவிடும். மேலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் அடுத்த சிகிச்சையை தொடர்வது நல்லது.


**  ஒரு நோய்க்கு அக்குபங்க்ச்சர் முறையில் சிகிச்சை முடிய எத்தனை நாட்களாகும்? 

ஓரிரு சிகிச்சைக்கு பிறகு நோயின் தீவிரத்திலிருந்து நீங்கள் விடுபடுவதை உணருவீர்கள். தொடர்ந்து உடல் தொந்தரவுகள் சீராகும் வரை சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும். எல்லா நோயாளிகளின் உடலும் ஒரே மாதிரியாக இருக்காது. அவரவர் உடலின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் மாறுபடும். நோயிலிருந்து குணமடைவது நிச்சயம்.